Social Icons

Thursday 3 July 2014

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

உண்ணாமல் பருகாமல் இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பாகும்இவைதவிர உள்ள ஏனைய காரியங்களைச் செய்வது நோன்பில் எந்தப் பாதிப்பையும்ஏற்படுத்தாது.
மேலும் நோன்பை முறிக்கும் செயல்கள் எவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் விளக்கி விட்டார்கள்பல்துலக்குவது நோன்பை முறிக்கும் என்றால் இறைவனோ இறைத்தூதரோ சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள்ஆனால் எதுவும் சொல்லப்படவில்லை.
மேலும் பல் துலக்குவதை (குறிப்பாக தொழுகை நேரங்களில்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்பபல முறைவலியுறுத்தியுள்ளேன்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி)
நூல் : புகாரி 888
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் சமுதாயத்திற்குஅல்லது "மக்களுக்குநான் சிரமத்தை ஏற்படுத்தி விடுவேனோஎன்று (அச்சம்இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமெனநான் அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்திருப்பேன்.
நூல் : புகாரி 887
நோன்புக் காலங்களிலும் நபியவர்களின் இந்த சுன்னத் கடைப்பிடிக்கப்பட வேண்டியதே
ரமலான் கால தொழுகை நேரங்களில் பல் துலக்கக் கூடாது என்றிருந்தால் நபியவர்கள்அதை விளக்கியிருப்பார்கள்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்